மகாத்மா காந்தியும் நானும் ஒன்னு, இது அறியாதவன் வாயில மண்ணு.. சிவசேனா எம்.பி.யின் பேச்சை பாருங்க
ஏர் இந்தியா ஊழியரை 25 முறை காலணியால் அடித்த சிவசேனா எம்.பி.ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விமானங்களில் ஏற்ற மறுப்பதை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு பேசினார்.
டெல்லி: ஏர் இந்தியா ஊழியரை காலணியால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், தன்னை விமானங்கள் ஏற்ற மறுப்பதை தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளை ரயிலில் இருந்து இறக்கிய சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வார். கடந்த 23-ஆம் தேதி புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
பிசினஸ் வகுப்பில் டிக்கெட் எடுத்துவிட்டு எகானமி வகுப்பை சேர்ந்த இருக்கையில் கெய்க்வாட் பயணம் செய்தார். டெல்லி விமான நிலையம் வந்தப் பிறகும் விமானத்தில் இருந்து இறங்காமல் அதிலேயே அமர்ந்திருந்தார்.

காலணியால் அடித்தார்
இதுகுறித்து விமான நிலைய ஊழியர் ஏர் இந்தியா மேலாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார், எம்பியை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது வெறிபிடித்தது போல் மேலாளரை தன்னுடைய காலணியால் கெய்க்வாட் 25 முறை அடித்தார்.

விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுப்பு
கெய்க்வாட் எம்.பி.க்கு கடும் கண்டனம் தெரிவித்த விமான நிறுவனங்கள் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக விமானத்தில் அவரை அனுமதிக்க தடை விதிப்பதாக இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் புனேவிலிருந்து டெல்லி வரை காரிலேயே பயணம் செய்தார்.

லோக்சபையில் அமளி
விமான நிறுவனங்களின் இத்தகைய செயல் குறித்து லோக்சபாவில் சிவசேனா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற ஒரு தடை நடவடிக்கையானது நீடித்தால், மும்பையில் இருந்து ஒரு விமானத்தையும் இயக்க விடமாட்டோம் என்றனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது விமான நிறுவன மேலாளரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவரை விமானத்தில் ஏற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

காந்தியுடன் ஒப்பீடு
அதற்கு கெய்க்வாட், நான் விமான ஊழியரை அடித்ததற்காக லோக்சபாவில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் ஊழியரிடம் கேட்க முடியாது. நான் எந்த தவறும் செய்ய வில்லை. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளை ரயிலில் இருந்து இறக்கினர். தற்போது என்னை விமானத்தில் ஏற்ற அனுமதி மறுக்கின்றனர் என்றார் அவர். காந்தியுடன் தன்னை சிவசேனை எம்.பி. ஒப்பிட்டு பேசும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications