Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. சிறை தண்டனையை கண்மூடித்தனமாக ரத்து செய்தார் நீதிபதி குமாரசாமி- கர்நாடகா வக்கீல் தவே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) கண்மூடித்தனமாக ரத்து செய்தது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் 23ம் தேதி முதல் விசாரித்து வருகிறது.

இன்றைய விசாரணையின் போது திடீரென மூத்த வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா ஆஜரானார். அவர் இந்த மேல்முறையீட்டு மனுவையே உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது; கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் விசாரிக்க முடியும் என வாதிட்டார்.

இதை தனி மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தம்முடைய இறுதி வாதத்தை முன்வைக்க அனுமதித்தனர்.

காரணமே சொல்லலை

காரணமே சொல்லலை

இதைத் தொடர்ந்து தவே முன்வைத்த வாதம்:

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை (நீதிபதி குன்ஹா தீர்ப்பை) கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) கண்மூடித்தனமான ரத்து செய்துள்ளது. எதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்பதற்கான காரணம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்படவில்லை.

சொத்து மதிப்பை குறைத்த ஹைகோர்ட்

சொத்து மதிப்பை குறைத்த ஹைகோர்ட்

ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பதை முதலில் ஏற்றுக் கொண்ட கர்நாடகா உயர்நீதிமன்றம் பின்னர் அந்த சொத்துக்களின் மதிப்பை வெகுவாக குறைத்துவிட்டது. எதற்காக கர்நாடகா உயர்நீதிமன்றம் இப்படி செய்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கர்நாடகா வாதத்தை கேட்கவில்லை...

கர்நாடகா வாதத்தை கேட்கவில்லை...

ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது தவறுதான் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் முதலில் கர்நாடகா அரசை ஒருதரப்பாகவே சேர்க்கவில்லை. பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்ட நிலையில் ஒரே ஒரு நாள் வாதிட அனுமதித்தது. அதுவும் எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதங்களை முன்வைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதித்திருந்தது. எதற்காக கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) இப்படி செய்ய வேண்டும்?

தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்

தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்

ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த நீதிமன்ற தீர்ப்பில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் முழுவதுமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆகையால் ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனை விதித்த விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

வருமானத்தை விட 76.7% சொத்து குவிப்பு

வருமானத்தை விட 76.7% சொத்து குவிப்பு

ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பில் தவறாக மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பே ரூ16.32 கோடி. இது ஜெயலலிதாவின் வருமானத்தை விட 76.7% அதிகம். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ வருமானத்துக்கு அதிகமாக 8.12%தான் சொத்து குவித்திருக்கிறார்; 1977ஆம் ஆண்டு கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கின் தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமாக 10% சொத்து குவித்திருந்ததால் விடுதலை செய்யப்பட்டார் என்பதை சுட்டிக்காட்டி ஜெயலலிதாவையும் கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது தவறானது. ஏனெனில் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கு சில லட்சங்கள் தொடர்புடையது; ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கோ வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குவித்தார் என்பதாகும்.

கடன்கள் வருமானமாகாது

கடன்கள் வருமானமாகாது


பரிசுப் பொருட்கள், கடன்களை வருமானமாக கருத முடியாது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ, கடன்களையும் வருமானமாகக் கருதி ஜெயலலிதாவின் சொத்தை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. வருமான வரி செலுத்துவிட்டதாலேயே ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துகள் முறையானவையாகிவிடாது.

இவ்வாறு தவே வாதிட்டார்.

பிவி ஆச்சார்யா

பிவி ஆச்சார்யா

மேலும் தவே தம்முடைய வாதத்தை இன்று மாலை 4 மணியுடன் நிறைவு செய்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பாக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆஜராகி வாதாட இருக்கிறார்; அவர் 3 நாட்கள் தம்முடைய வாதத்தை முன்வைப்பார் என்றும் உச்சநீதிமன்றத்தில் தவே தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+