மூன்றாக பிரிக்கப்படுகிறது பெங்களூர் மாநகராட்சி.. தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு!
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவை 3 மாநகராட்சிகளாக பிரிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாக வசதிக்காக பெங்களூரு மாநகராட்சியை மூன்றாக பிரிக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுகுறித்து விவாதிக்க, நேற்று ஒருநாள் சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது.

பேரவை கூடியதும் சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, கர்நாடகா முனிசபல் கார்பொரேசன் (சட்டத்திருத்தம்) மசோதா 2015-ஐ சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மீது, பாஜக, மஜத மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்களும் வாதிட்டனர்.
ஆனால், இரவு 8 மணிக்கும் மேலாக விவாதம் தொடர்ந்த நிலையில், குரல் வாக்கெடுப்புக்கு மசோதாவை விட்டார் சபாநாயகர் காக்கோடு திம்மப்பா. குரல்வாக்கெடுப்பில் சட்டம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டம் மேலவைக்கு சென்றுள்ளது. மேலவை வரும் வியாழக்கிழமை கூடுகிறது. அங்கு காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. எனவே, சட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அப்படியே நிறைவேறினாலும், ஆளுநர் வஜுபாய் வாலா, அனுமதிப்பதும் சந்தேகம் என்று தெரிகிறது.
முன்னதாக சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் ஜெயச்சந்திரா, "பெங்களூரு மாநகராட்சியின் மக்கள்தொகை 1 கோடியை நெருங்குவதால், நிர்வாகம் பெரும் இடையூறுக்குள்ளாகிறது. குப்பைகளை கூட அள்ளி கொட்ட மாநகராட்சி கஷ்டப்படுகிறது. வரி வருவாய் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே மாநகராட்சியை மூன்றாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது" என்றார்.
ஆனால், மஜத உறுப்பினரான முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாஜகவின் முன்னாள் துணை முதல்வரான அசோக் உள்ளிட்டோர், பெங்களூரு மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்பட்டால், மாநகராட்சியில், கன்னடர்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். பிற மொழி பேசும் மக்கள் (தமிழ், தெலுங்கு) பெரும்பான்மைமிக்கவர்களாக ஆகிவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்தனர். ஆனால், அரசோ சட்டத்தை நிறைவேற்றுவதில் குறிக்கோளாக இருந்ததால், மசோதா நகல்களை கிழித்து போட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி, வடக்கு, மத்தி, தெற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டால், மத்தி பெங்களூரு மாநகராட்சி பகுதியில், கன்னடர்களைவிடவும், தமிழர்களே பெரும்பான்மையுள்ளவர்களாக மாறுவார்கள். எனவே மேயர் உள்ளிட்ட பதவிகளும் தமிழர்களுக்கே கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இவ்வாறு மாறினால், வருங்காலங்களில் பெங்களூரை தமிழகத்துடன் இணைக்க கோரிக்கை எழும் வாய்ப்புள்ளது என்ற அச்சம், கர்நாடக எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications