நீட் தேர்வில் மாபெரும் மோசடி... குஜராத்தில் மட்டும் ஈஸி கேள்விகள்.. மருத்துவர்கள் சங்கம் புகார்
நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாக மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மோசடி நடந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: நீட் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டது. பெரும் கெடுபிடிகளுடன் மாணவர்கள் நடத்தப்பட்டனர். கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்ட மாணவர்கள் கடும் மன உளைச்சலுடன் தேர்வை எழுதினர். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக
சமூக சமத்துவத்துவ மருத்துவ சங்க நிர்வாகி ரவீந்தரநாத் புகார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்தரநாத், நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்று கூறிவிட்டு வெவ்வேறு மாநிலங்களில் வேறு வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக புகார் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் எளிமையான முறையில் கேள்வித்தாள் கேட்கப்பட்டிருந்தாக கூறிய ரவீந்தரநாத், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதே போல கடந்த 2015ஆம் ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.
குஜராத்தில் மட்டுமே நீட் தேர்வு கேள்வித்தாள்கள் எளிமையான முறையில் இருந்ததாக இருந்தது பாரபட்சமானது என்றார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்ற கூறிவிட்டு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது சதிச்செயல் என்றார். குஜராத் மாணவர்கள் அதிக அளவில் டாக்டர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சதி நடந்துள்ளது என்றார்.
மோசடியான நீட் தேர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் ரவீந்தரநாத் கூறினார். நீட் தேர்வு பற்றி ஆரம்பம் முதலே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தவறாக தகவல்களையே கூறி வருகிறார் என்றும் ரவீந்தரநாத் தெரிவித்தார். இது தேசிய தகுதித்தேர்வா? குஜராத் தகுதித்தேர்வா என்றும் ரவீந்தரநாத் கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு பற்றி சிபிஎஸ்இ கூறியதை ஏற்க முடியாது ஒரே மாதிரியான கேள்வித்தாளில் தேர்வு நடத்த வேண்டும் என்றும் ரவீந்தரநாத் கூறியுள்ளார்.
நீட் தேர்வு பற்றி ரவீந்தரநாத் கூறியுள்ள புகார் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. கல்வியாளர்கள் பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications