திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன?
டெல்லி: "இந்தியா கூட்டணி" கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணி முறிந்தது. தவெகவுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ் செய்த துரோகம் என்று திமுக விமர்சித்து வந்த நிலையில், "இந்தியா கூட்டணி" ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காது என்று திமுக அறிவித்துள்ளது. "இந்தியா கூட்டணி"யில் முக்கிய கட்சியாக அங்கம் வகித்த திமுக புறக்கணித்து இருப்பது பெரும் கவனம் பெற்று இருக்கிறது.
"இந்தியா கூட்டணி" கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணி முறிந்தது. தவெகவுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ் செய்த துரோகம் என்று திமுக விமர்சித்து வந்த நிலையில், "இந்தியா கூட்டணி" ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காது என்று திமுக அறிவித்துள்ளது..

"இந்தியா கூட்டணி"யில் முக்கிய கட்சியாக அங்கம் வகித்த திமுக புறக்கணித்து இருப்பது பெரும் கவனம் பெற்று இருக்கிறது. அதேபோல, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலால் இத்தகைய அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில், இன்று நடைபெறும் "இந்தியா கூட்டணி" கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2029 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்கால செயல் திட்டம் குறித்து "இந்தியா கூட்டணி" அணி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கும் என தெரிகிறது. தேசிய பிரச்சினைகளில் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றி விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கம்யூனிஸ்ட் கட்சி "இந்தியா கூட்டணி" ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்து இருந்தாலும், கேரளாவில் சிபிஎம் கட்சியும் பாஜகவும் டீலிங் வைத்து இருந்ததாக காங்கிரஸ் விமர்சனம் செய்ததற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எம்.ஏ. பேபி அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
இது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி இதுவரை அதற்கு பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனால் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் இந்த பிரச்சினை வெடிக்குமா? என்ற பரபரப்பு நிலவுகிறது. இந்தக் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது. மொத்தம் 23 கட்சிகள் "இந்தியா கூட்டணி" கூட்டத்தில் பங்கேற்கும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மியும் இந்த கூட்டணியில் இருந்து விலகி இருக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து நடைபெற உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டு வருவதால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனை ஒருங்கிணைந்து முறியடிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications