அப்பவே வந்திருந்தா தேடும் அவசியமே வந்திருக்காது... சிம்பு குறித்து போலீஸ் விளக்கம்
சென்னை: புகார் அளிக்கப்பட்டதும் நடிகர் சிம்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தால், தற்போது அவரைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் ‘யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் உள்ள அந்தப் பாட்டிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

வழக்கு...
பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் பேரில் இரு இடங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

தலைமறைவான சிம்பு...
இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற அனிருத், இந்தியா திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டார். ஆனால், சிம்பு எங்கிருக்கிறார் என்றே இல்லை. தலைமறைவாக உள்ள சிம்புவைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை...
இது தவிர சிம்பு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஒத்திவைத்து விட்டார். இதனால், சிம்புவைக் கண்டதும் கைது செய்யும் முயற்சிகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.

தாயார்...
இந்நிலையில் நேற்று சிம்புவின் தாயார் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், சிம்புவின் நிலை குறித்து அவர் கண்ணீருடன் பேசி இருந்தார்.

நேரில் விளக்கம் தந்திருந்தால்...
ஆனால், இவ்வாறு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது சிம்பு தான் என்கின்றனர் போலீசார். வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிந்தவுடன் அவரே நேரில் வந்து விளக்கம் அளித்து சென்றிருந்தால் நாங்கள் தேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அவர்கள் கூறுகின்றனர்.

தென்தமிழகத்தில் தான்...
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிம்புவை இப்போது நாங்கள் தேடி கண்டுபிடித்தால் கைது செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படும். அவர் வெளிநாடுகளுக்கு இது வரை தப்பிச் செல்லவில்லை. தென் தமிழகத்தில்தான் எங்கேயோ தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த இருக்கிறோம்" என்றார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications