கடனை திருப்பி செலுத்த வங்கி அதிகாரிகள் நெருக்கடி.. விவசாய சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன் தற்கொலை
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வங்கி அதிகாரிகள் நெருக்கடிகள் கொடுத்ததால் மனம் உடைந்த விவசாயி வேம்புகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த வேம்புகிருஷ்ணன் தற
திருநெல்வேலி: தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இன்று நெல்லை மானூரில் விவசாயிகள் சங்கத் தலைவரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. அப்பகுதி மக்களை சோகமடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போய் பயிர்கள் கருகி நாசமானதால் சுமார் 250 விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் மரணம் அடைந்துள்ளனர்.
ஆனால், தமிழக அரசு சார்பில் வெறும் 17 விவசாயிகள்தான் மரணம் அடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும், அவர்களது குடும்பத்திற்கான நிவாரணத் தொகையும் மிகக் குறைவாகவே அறிவித்துள்ளது.

வங்கிக் கடன்
இந்நிலையில், நெல்லை மானூரைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார், நெல்லை மானூரைச் சேர்ந்த விவசாயி வேம்புகிருஷ்ணன், சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக உள்ளார். இவர் விவசாயத்திற்காக வங்கியிடம் கடன் வாங்கியுள்ளார். மழையில்லாமல் விவசாயம் பொய்த்துப் போன நிலையில் அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
அதிகாரிகள் நெருக்கடி
இதனையடுத்து, வங்கி அதிகாரிகள் வேம்புகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து பணத்தை கட்டும்படி தொல்லை கொடுத்துள்ளனர். விவசாயி வேம்பு எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மேலும் மேலும் நெருக்கடி கொடுத்துள்ளனர் வங்கி அதிகாரிகள்.
மனம் உடைந்து தற்கொலை
வங்கி அதிகாரிகளின் தொடர் நெருக்கடியால் என்ன செய்வது என்று தெரியாத விவசாயிகள் சங்கத் தலைவரான வேம்புகிருஷ்ணன் மனம் உடைந்து காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மன உலைச்சலால் வேம்பு இன்று தற்கொலை செய்து கொண்டு மாண்டார்.
அதிர்ச்சி
விவசாய சங்கத் தலைவரே வங்கி அதிகாரிகளின் நெருக்கடியால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மானூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இனியும் விவசாயிகள் மரணங்கள் தொடராமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications