நாகையில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சி
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்துறை சார்பாக அட்மா திட்டம் மூலமாக ஊரடங்கு காலத்தில் வருமானம் ஈட்டுவதற்கு பெண் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
Recommended Video
காளான் வளர்ப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தொடங்கி வைத்தார். பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு மையங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல் சாகுடி முக்கிய பங்கு வகிப்பதாகவும், அதிலிருந்து கிடைக்கப்பெறும் வைக்கோல் மாட்டுக்கு தீவனமாக பயன்படுகிறது எனவும், அறுவடை இயந்திரம் மூலம் கிடைக்கப்பெறும் வைக்கோலை கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
சூரிய, சந்திர கிரகண காலங்களில் கோவில்களை மூடுவது எதற்கு தெரியுமா
இதனை பயன்படுத்தி விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு மேலும் வருமானத்தை ஏற்றுவதற்காக இப்பயிற்சியினை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதாகவும் இத்திட்டத்தை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.