விவசாயிகளுக்கு ரூ. 7,000 கோடி பயிர்க் கடன்... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு #TNBudget
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
சென்னை : தமிழக அரசின் 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதேபோல், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமாருக்கும், இதுமுதல் பட்ஜெட்டாகும்.
இந்நிலையில் 2017 - 18ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது குற்றவாளி சசிகலா பெயரை குறிப்பிடுவதா? என்று கூறி திமுக எம்.எல் .ஏக்கள் அமளியில் ஈடுப்ட்டனர். மேலும் சசிகலா , தினகரன் பெயர்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதன் விவரம் :
*2018 மார்ச் மாதம் தமிழகத்தின் கடன் 3,14,366 கோடி ரூபாய். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இந்த கடன் தொகை 20.90 % இருக்கும் என்பதால், அனுமதிக்கப்பட்ட 25% அளவிற்கு உட்பட்டே இருக்கும், அதனால் கடன் கட்டுப்பாட்டுக்குள்ளே உள்ளது
*தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் இருந்து 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
* தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடி அதிகரிப்பு.
*பால்வளத்துறைக்கு ரூ.130 கோடி, மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு.
*வணிகவரி மூலம் ரூ77,234 கோடி வருவாய் கிடைக்கும்
*நீராதார மேலாண்மை,வறுமை ஒழிப்பு தூய்மை தமிழ்நாடு ஏழைகளுக்கு வீட்டுவசதி உள்ளிட்ட நோக்கங்கள் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
*கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை.
* நீதி நிர்வாக துறைக்கு 984 கோடி ஒதுக்கீடு, வருவாய் துறைக்கு 5695 கோடி ஒதுக்கீடு
* சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு 532 கோடி ஒதுக்கீடு.
* 16-17 ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி 7.94 இருந்து உயர்ந்து 17-18 ல் 9 % ஆக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது
*2017-18 ஆண்டில் ஊரக வறுமை ஒழிப்பிற்கு 469 கோடியும், நகர்புர வறுகை ஒழிப்பு திட்டத்திற்கு 272.12 கோடி ஒதுக்கீடு
*10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் குடியிருப்புகளுடன் அமைக்கப்படும்.
இது போன்ற பல அம்சங்களை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார் .
இதற்கிடையே அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி சண்முகம், டாக்டர்.விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லி சென்றிருப்பதால் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications