PF பணத்தை எடுத்து தங்கம் வாங்கலாமா? சீக்ரெட் சொல்லும் ஆனந்த் சீனிவாசன்! ஆஹா ரொம்ப முக்கியம் கவனிங்க
சென்னை: தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் வேளையில், சாதாரண நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் துடிக்கிறார்கள். ஆனால், அதற்குக் கையில் போதிய பணம் இல்லை என்பதால் மாத சம்பளம் வாங்குவோர் தங்கள் பி.எஃப் (PF) பணத்தை எடுத்துத் தங்கத்தில் போடலாமா என யோசிக்கிறார்கள். இருப்பினும், இதில் ஒரு மிகப் பெரிய பிரச்சனை இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இன்று ஒரு பவுன் தங்கம் விற்கும் விலையைப் பார்த்தால், "இப்போதே வாங்கிவிட வேண்டும், இல்லையென்றால் இன்னும் ஏறிவிடும்" என்ற பயம் பலரிடம் இருக்கிறது. இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் 2022 காலகட்டத்தில் தங்கம் விலை என்னவாக இருந்தது.. இப்போது என்னவாக இருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
இருப்பினும், அனைவரிடமும் தங்கத்தைப் பவுன் கணக்கில் வாங்கி போடப் பணம் இருக்காது. இதனால் பொதுமக்கள் பலரும், குறிப்பாக மாத சம்பளம் வாங்குவோர் PF பணத்தை எடுத்து தங்கம் வாங்கலாமா என்றே யோசிக்கிறார்கள். இது மேலோட்டமாக பார்க்கும் போது நல்ல யோசனை போலத் தெரிந்தாலும் இதில் மிகப் பெரிய சிக்கல் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கையை விடுக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "நான் எனது வாழ்க்கையில் PF, PPF என எதுவும் போட்டது இல்லை.. வேலை செய்யும் இடத்தில் PF பிடிக்கத் தான் செய்வார்கள். இன்டிபென்டன்ட் பிசினஸ்மேனாக இருந்தால் மட்டுமே PF கட்ட தேவையிருக்காது.
PF தொகை
ஆனால், மாத சம்பளம் வாங்குவோருக்கு ஒரு செக்யூரிட்டி இருக்கிறது. 1ம் தேதி வந்தால் சம்பளம் வந்துவிடும் என்ற உத்தரவாதம் இருக்கிறது. ஆனால், என்னைப் போன்ற சொந்தமாகத் தொழில் செய்வோருக்கு மாதம் 1ம் தேதி வந்தால் இத்தனை பேருக்குச் சம்பளம் தர வேண்டும் என்ற பொறுப்பு தான் இருக்கிறது. எல்லா ரிஸ்கும் நான் எடுக்க வேண்டி இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு PF கிடையாது.. பாதுகாப்பான ரூட்டை தேர்வு செய்வோரிடம் அரசு அதிகபட்ச தொகையை இப்படி எல்லாம் வசூலிக்கப் பார்க்கிறது.
எதற்குப் பயன்படும்!
ரூ.12 லட்சம் வரை வருமான விலக்கு கொடுத்தாலும் இதில் இருந்த மற்ற சலுகைகளை நீக்கிவிட்டார்கள். PFல் கூட 10% மட்டுமே வெளியே சந்தையில் முதலீடு செய்வார்கள். மற்ற தொகையை வைத்து அரசின் பத்திரங்களையே வாங்குவார்கள்.
இப்படிச் சிக்கல்கள் இருந்தாலும் சரி, PF பணத்தை எல்லாம் எடுக்கக்கூடாது.. இந்த PF இருந்தால் தான் ஓய்வு பெறும் போது குறைந்தபட்சம் ஒரு தொகை கிடைக்கும். அதையாவது வாங்கிக்கலாம். அந்த தொகையை வைத்து ஒரு கடன் பத்திரம் வாங்கி போட்டால்.. மாதம் மாதம் ஓய்வூதியம் போல ஒரு தொகை வரும்.
தங்கம் வாங்கலாமா!
PF பணத்தை எடுத்து தங்கம் வாங்கலாமா எனச் சிலர் கேட்கிறார்கள். தங்கம் இப்போது ஏறி இருக்கிறது ஓகே.. குறுகிய காலத்தில் ரூ.3000 டூ ரூ.12,000 ஏறுச்சு எனச் சிலர் சொல்வார்கள்.. ஆனால், அப்படி மின்னல் வேகத்தில் ஏறிய காலம் முடிந்துவிட்டது. மீண்டும் அதுபோல கண்டிப்பாக நடக்கும் எனச் சொல்ல முடியாது. PF இருந்தால் தான் சுய ஒழுக்கத்தோடு பணத்தைச் சேமிப்போம். இல்லையென்றால் யாராக இருந்தாலும் சேமிக்க மாட்டார்கள். இதனால் தான் சொல்கிறேன் PFஇல் யாரும் கை வைக்க வேண்டாம்" என்றார்.












Click it and Unblock the Notifications