பெட்ரோல், டீசல் விலை விரைவில் அதிகரிப்பு? லிட்டருக்கு இவ்வளவு உயர்கிறதா? வாகன ஓட்டிகள் ஷாக்
சென்னை: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது விரைவில் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.. சர்வதேச சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த அதிரடி விலை உயர்வை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.. நீண்ட நாட்களுக்குப் பிறகு எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப் போவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உயரப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை மாற்றியமைக்கத் திட்டமிட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 5 ரூபாய் வரை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த விலையேற்றம் குறித்த தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகள்?
இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.. தற்போதைய சூழலில் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், மிக விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இந்த அளவிலான உயர்வு ஏற்பட்டால், அது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை..
வாகன ஓட்டிகள் ஷாக்
ஏற்கனவே விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த நேரத்தில் எரிபொருள் விலையை உயர்த்துவது என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்.
டீசல் விலை உயரும்போது சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்து, அதன் விளைவாக காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.. எனவே, அரசு அல்லது எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வைத் தவிர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது..
நிர்வாக ரீதியான நடவடிக்கைகள்
எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த விலையேற்றம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இப்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த விலை மாற்றம் மிகக் குறுகிய காலத்திலேயே நடைமுறைக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எண்ணெய் நிறுவனங்களின் தரப்பிலிருந்து வெளியாகும் வரை, மக்களிடையே ஒருவிதமான பதற்றமான சூழலே நிலவி வருகிறது.. குறிப்பாக, போக்குவரத்துத் துறையைச் சார்ந்தவர்கள் இந்த விலை உயர்வை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்..
5 ரூபாய் விலை உயர்வு
ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் ஒரு விஷயமாகும்.
ஒருவேளை 5 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டால், அது மொத்த துறைகளிலும் விலையேற்றத்தை கொண்டு வரும்.. இதனால் பொதுமக்கள் தங்கள் பட்ஜெட்டைச் சரிசெய்யப் போராட வேண்டிய சூழல் உருவாகும்.. இந்த விலை உயர்வு குறித்த இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது..!!












Click it and Unblock the Notifications