ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'!
மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாk மீண்டும் அதிகரித்து வரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான ராணுவ மோதல் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமுக வலைக்தளமான ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இன்று இரவே ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று இரவு நடக்கும் மெகா தாக்குதல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார் கட்டமைப்பு மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் (Anti-Aircraft Systems) உள்ளிட்ட அனைத்து வகையான தற்காப்பு அரண்களும், ஈரானின் தாக்குதல் திறன்களும் ஏற்கனவே அமெரிக்கப் படைகளால் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன.
தற்போதைய சூழலில் எவ்வித ராணுவ பலமும் இன்றி பலவீனமாக இருக்கும் ஈரான் நாட்டின் மீது, இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கவுள்ளதாக டிரம்ப் மிக வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
'கார்க்' தீவைக் கைப்பற்றப் போகும் அமெரிக்கா
இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்காக, ஈரானின் மிக முக்கியப் பொருளாதார மையமான 'கார்க் தீவை' (Kharg Island) அமெரிக்கா தனது முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இத்துடன் ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு மையங்களையும் அமெரிக்கா தனது வசப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகச் சந்தையை அமெரிக்கா நேரடியாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்போகிறது என்பது டிரம்பின் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா பாணியில் ஈரானை முடக்கத் திட்டம்
ஏற்கனவே தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் எண்ணெய் சந்தையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அந்நாட்டின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
இதுக்குறித்து பேசிய டிரம்ப், வெனிசுலா மீதான தாக்குதல் மூலம் அமெரிக்காவிற்கும் வெனிசுலா நாட்டிற்கும் பெரிய அளவில் பலனளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இதே உத்தியை ஈரான் நாட்டிலும் செயல்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.
டிரம்ப்-ன் இந்த பதிவின் மூலம் சர்வதேசக் கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்காவின் ஆதிக்கம் பன்மடங்கு உயரப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications