20ல் துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் பொங்க‌ல் விழா

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா வரும் 20ம் தேதி முஸ்ரிப் பூங்காவில் நடைபெறுகின்றது.

துபாய் தமிழ்த்துளி அமைப்பின் சார்பில் பொங்கல் விழா வரும் 20ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை முஸ்ரிப் பூங்காவில் நடைபெறுகின்றது. அப்போது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடக்கவிருக்கிறது. குழந்தைகளுக்கு திருக்குறள் போட்டியும், பெரியவர்களுக்கு சில மகிழ்ச்சியான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. திருக்குறள் போட்டிக்கு அன்புடைமை மற்றும் கல்வி ஆகிய அதிகாரங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். விழா முடிந்தவுடன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

துபாயில் இருந்து முஸ்ரிப் பூங்காவிற்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும். போக்குவரத்து வசதி தேவைப்படுபவர்கள் முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்து கொள்ளவும். விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் வழங்கப்படும். விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்துளி அமைப்பு கேட்டுக் கொள்கிறது. இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050-7472432,050-2593616 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+