பாரதி பக்கம்
அடிமைச்சருக்கம்
(தொடர்ச்சி)
விதுரன் சொல்வதுவேறு
நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி! நின் அவைக்களத்தே அமைச்ச ராக
வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை
வைத்திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய்.
சிலங்கைப் பொற் கச்சணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர், மற்றுங்
குலங் கேட்ட புலைநீசர், பித்தர்
கோமகனே! நினக்குரிய அமைச்சர் கண்டாய்! (11)
சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா!
செப்புவன நினக்கெனநான் செப்பினேனா?
மன்றார நிறைந்திருக்கும் மன்னர், அறியச் சொன்னேன்.
இன்றோடு முடிகுவதோ? வருவ தெல்லாம்
யானறிவேன், வீட்டுமனும் அறிவான் கண்டாய்,
வென்றான் உன் ஆசையெலாம் யோகி யாகி
வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின்றானே. (12)
விதிவழிநன் குணர்ந்திடினும், பேதை யேன்யான்
வெள்ளைமன முடைமையினால், மகனே, நின்றன்
சதிவழியைத் தடுத்துரைகள் சொல்லப் போந்தேன்
சரி சரி இங் கேனுரைத்தும் பயனொன்றில்லை
மதிவழியே செல்லு கென விதுரன் கூறி
வாய்மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்
பதிவுறு வோம் புலியிலெனக் கலிமகிழ்ந்தான்
பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார். (13)