For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
(தொடர்ச்சி)
சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர் கொடைக் கை?- சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை. (7)
போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடைவாய்? - பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திரு வாய். (8)
தந்தை இனிதுறந் தான்அர சாட்சியும்
தையலர் தம்முறவும் -- இனி
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
எம் அனை செய்த உள்ளம் (9)
அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே - இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழிஎங்கள் அன்னை மொழி. (10)
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி - தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்லநம் அன்னை மதி. (11)
தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை? - அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை. (12)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]