For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஆசிரியப் பா!
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் தமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெல்லாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்கும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்1
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]