பாரதி பக்கம்
மார்ச் 21, 2001
சுயசரிதை
மணம்
நிகழ்த்த நாதனி கூசு மதன்றியே
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்
யாங்ஙண் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்:
அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்:
அம்ம! மாக்கன் மணமெனுஞ் செய்தியே.
வினைத்தொ டர்களில் மானுட வாழக்கையுள்
மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ? (30)
வீடுறுவணம் யாப்பதை வீடென்பார்!
மிகவி ழிந்த பொருளைப் பொருளென்பார்:
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை
நல்ல தோர்மண மாமென நாட்டுவார்.
கூடு மாயிற் பிரள சரியங் கொள்:
கூடு கின்றில தென்னிற் பிழைகள் செய்து
ஈடழிந்து நரகவழிச் செல்வாய்:
யாது செயினும் இம்மணம் செய்யல்காண். (31)
வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
பார்க்கினும்பெறல் சால வரிதுகாண்.
புசிப்ப தும்பான் நல்லமு தென்றெணிப்
புலையர் விற்றிடும் கள்ளுண வாகுமோ?
அசுத்தர் சொல்வது கேட்கலிர், காளையீர்:
ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின். (32)