For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
நவம்பர் 23, 2001
தேச முத்துமாரி -2
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய். (1)
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய். (1)
பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்:
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீர்ப்பாய். (2)
எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி:
ஒப்பி.யுன தேவல்செய்வேன் உனதருளில் வாழ்வேன். (3)
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும். (4)
ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்:
யாதானுந் தொழில் புரிவோம்: யாதுமவள் தொழிலாம். (5)
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்:
இன்பமே வேண்டி நிற்போம்: யாவுமவள் தருவாள். (6)
நம்பினார் கெடு வதில்லை: நான்கு மறைத் தீர்ப்பு!
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம். (7)
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]