For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஏப்ரல் 25, 2001
சர்வ மத சமரசம்
(தொடர்ச்சி)
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்,
நல்ல கண் பூசி மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கென்றே. (65)
பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ: சாமி நீ கடவுள் நீயே:
தத்வமணி தத்வமஸி, நியே அஃதாம்:
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை:
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் சிவோஹ மென்று சாதிப் பாயே! (66)
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]