கண்ணதாசனை காணுவோம்

Subscribe to Oneindia Tamil

சிறுகூடல் பட்டியில் பிறந்த முத்தையா, பின்னாளில் மாபெரும் கவிஞராக மாறுவார் என்று அவரைப் பெற்ற சாத்தப்பனும், விசாலாட்சியும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், முத்தையா கனவு கண்டார். அவரது கனவும் பலித்தது. கண்ணதாசனாக மாறி, நமக்கெல்லாம், சொல்விருந்து படைத்தார்.

கண்ணதாசன், வார்த்தைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட நறுக்கு தெரித்தாற் போல இருந்தவர். 1921-ம் ஆண்டு,ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், சென்னைக்கு வந்து, சொல்லாட்சி புரிவதற்கு முன் பட்ட துன்பங்கள்,துயரங்கள், வருத்தங்கள், வலிகள் ஏராளம். (அத்தனையும் பின்னாளில் நமக்குப் பாடல்களாகக் கிடைத்தது வேறுவிஷயம்.)

எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவராக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும், தனதுவார்த்தைகளில் படம் பிடித்துக் காட்டினார் கண்ணதாசன்.

தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒவ்வொரு சம்பவத்தையும், அப்படியே பாட்டுக்களில் வடித்த கவிஞர் இவராகமட்டுமே இருக்க முடியும். 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை வடித்துள்ளார் கண்ணதாசன். அத்தனையும் தேன்துளிகள்.

தத்துவப் பாடல்களால் நமது கண்களைத் திறந்த கண்ணதாசன், 1981-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதிஅமெரிக்காவில் கண் மூடினார்.

கண்ணதாசனின் பாடல்கள் இப்போதும் சிந்திக்க வைப்பதற்குக் காரணம், அவரது வார்த்தைகளில் உள்ளநிதர்சனம், உண்மை, இயல்பு ஆகியவையே. தான் அனுபவித்த, உணர்ந்த, பட்ட சம்பவங்களை அப்படியேகொடுத்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல, சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால், தமிழகமக்களின் மனதில் சட்டென்று பதிந்து விட்டன.

காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல சொல்ல, அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு.

கண்ணதாசனைக் காண வேண்டும், அவரது பாடல்களை ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இதுஒரு சிறு காணிக்கை.

வாருங்கள், அனுபவியுங்கள் ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+