மிஸோரம் யூதர்கள்
ஹிட்லரின் கடும் தாக்குதலிலிருந்து தப்பிக்க உலகின் பல்வேறு நாடுகளுக்கும்யூதர்கள் இடம் பெயர ஆரம்பித்தனர். அப்படி வந்தவர்களில் பலர் இந்தியாவிலும்வந்து குடியேறினர்.
பாலஸ்தீனத்தை பிரித்து தனி யூத நாடாக இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னரும்பலரும் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். அவர்களது வம்சாவழியினர் இன்னும்இந்தியாவில் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் மிஸோரம்,மணிப்பூர் மற்றும் கேரளத்தில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் யூத இனத்தின் மறைந்து போன 10 பிரிவினரை அடையாளம் காணும்பணியில் ஷவே இஸ்ரேல் என்ற அமைப்பு இஸ்ரேலில் இயங்கி வருகிறது. இந்தஅமைப்புஉலக நாடுகளில் பரவியிருக்கும் யூதர்கள் குறித்த தகவல்களை சேகரித்து,அவர்களில் மறைந்து விட்டதாக கருதப்படும் யூத பிரிவினர் இருக்கிறார்களாஎன்பதை ஆராய்ந்து வருகிறது.
தற்போது மிஸோரம், மணிப்பூர் மாநிலங்களில் வசித்து வரும் யூதர்கள், பைபிளில்வரும் ஜோசப்பின் வழித் தோன்றல்கள் என கூறப்படுகிறது. ஜோசப்பின் மகன்களானமான்ஷே மற்றும் எப்ரைம் ஆகியோரின் வழிவந்தவர்கள்தான் மணிப்பூர், மிஸோரமில்வசிக்கும் யூதர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒலே (வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த யூதர்கள்) என்ற அந்தஸ்தைக்கொடுக்க இஸ்ரேல் பிரதமர் ஒல்மார்ட் உறுதியளித்துள்ளார்.
|