கார்க்கியின் தாய்க் காவியத்தை மொழி பெயர்த்த கருணாநிதிசென்னை:
திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதை மழை மற்றும் ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் நூலை மொழி பெயர்த்துகருணாநிதி எழுதிய தாய் காவியம் ஆகிய நூல்கள் சென்னையில் வெளியிடப்பட்டன.
அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்த விழாவில் கவிதை மழை நூலை கவிஞர் அப்துல் ரகுமான்வெளியிட மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். தாய் காவியத்தை கவிஞர் வைரமுத்து வெளியிடமத்திய அமைச்சர் ராஜா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ரஷ்ய தென் இந்தியத் தூதர் மைக்கேல் மெக்னாடிஸ் கலந்து கொண்டு தமிழில் பேசி அசத்தினார்.
அவர் கூறுகையில், ரஷ்ய நூலை தமிழில் மொழி பெயர்த்து எழுதிய கருணாநிதிக்கு தனது நாட்டின் சார்பில்பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும், இது போன்ற பண்பாட்டுப் பரிவர்த்தனைகளை கருணாநிதி தொடரவேண்டும் என்றும் கூறினார்.
வைரமுத்து பேசுகையில், ரஷ்ய கவிஞர் கார்க்கி பிறந்த ஊரிலிருந்து மண் எடுத்து வர ஏற்பாடு செய்துள்ளேன்.அதை கருணாநிதியிடம் விரைவில் வழங்குவேன் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நல்லகண்ணுஆகியோரும் இதில் பங்கேற்றனர். கார்க்கியின் ஓவியத்தை கருணாநிதிக்கு நல்லகண்ணு பரிசாக அளித்தார்.
சங்கரய்யா பேசுகையில், தாய்க் காவியத்தை கார்க்கி எந்த உணர்வோடு எழுதினாரே அதே உணர்வோடு தான்இந்த நூலையும் கருணாநிதியும் எழுதியிருக்கிறார். கம்யூனிஸ்டுகள் செய்திருக்க வேண்டிய கருணாநிதிசெய்திருக்கிறார்.
ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டவர் கார்க்கி. மீண்டும் நிச்சயம் ஒரு நாள் ரஷ்யாவில் கம்யூனிசம் தலைதூக்கும் என்றார்.
பின்னர் கருணாநிதி ஏற்புரை ஆற்றிப் பேசுகையில்,
கவிதை மழை நூல், 1937-38ம் ஆண்டில் இருந்து நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. பெரியாரின்இயக்கத்தில் ஈடுபட்டபோது, அண்ணாவின் அன்புக்கு ஆளாகி தமிழ்ப் பணி ஆற்றிய காலந்தொட்டு, இதுவரைநான் எழுதுவது பேசுவது எல்லாமே லட்சியப் பிடிப்போடு தான்.
சங்கரய்யா அவர்கள் பேசும்போது, கம்யூனிஸ்ட் காரர்கள் செய்திருக்க வேண்டிய வேலையை கருணாநிதிசெய்துள்ளார் என்றார். என்னை ஏன் இன்னும் பிரித்துப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் ஒருவன் தான். நான்எழுதியிருக்கிறேன் என்றால் ஒரு கம்யூனிஸ்ட் தான் எழுதியிருக்கிறான் என்றே எண்ணிக் கொள்ளுங்கள்.
சிறு வயதிலேயே செங்கொடி சிறுவன் தான் நான். பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காமல் இருந்திருந்தால்தஞ்சை மண்ணில் செங்கோடி ஏந்தி போராடிக் கொண்டு இருந்திருப்பேன்.
இன்று திமுகவின் தலைவன் என்றாலும் கொள்கையால் என்றும் கம்யூனிஸத்தோடு பின்னிப் பிணைந்தவன் தான்நான்.
எடுத்த உறுதியை, லட்சியத்தை, குறிக்கோளை தடங்கல் இல்லாமல், தயங்காமல் மேற்கொண்டதால் தான்இதுபோன்ற நூல்களை என்னால் ஆக்க முடிந்தது என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் வாலி, சுரதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications