சிறுகதைகள் எழுதுங்கள்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறுகதைகள் எழுதும் போக்கு குறைந்து விட்டது குறித்து திமுக தலைவர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர் டாக்டர் மா. நன்னன் எழுதியுள்ள சிறுகதைகள் தொகுப்பை கருணாநிதி சென்னையில் வெளியிட்டுப்பேசுகையில்,

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், சிறுகதைகள் மூலம் பகுத்தறிவையும், மக்கள் கருத்துக்களையும்சொல்லியதில் திராவிட இயக்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முன்பெல்லாம் நிறைய சிறுகதைகளை எழுதுவார்கள். ஆனால் இப்போதுஅந்தப் போக்குக் குறைந்து விட்டது. சிறுகதைகள் எழுத தயங்குகிறார்கள் அல்லது சோம்பல்படுகிறார்கள். வேறுவேலைகள் நிறைய இருப்பதால் சிறுகதைகள் எழுதுவதிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

திராவிட இயக்கம் எப்படி வளர்ந்தது என்பதையும் இந்த நேரத்தில் கூற விரும்புகிறேன். திராவிட இயக்கத்தின்கருத்துக்களை ஒருவர் வலுவாக கூறுவார். அதைக் கேட்பவர் அதை கடுமையாக எதிர்ப்பார். ஆனாலும் திராவிடஇயக்கத்துக்காரர் தனது வாதத்தை வலுவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைப்பார். கடைசியில் அவரதுவாதம்தான் வெல்லும். இப்படித்தான் திராவிட இயக்கம் வளர்ந்தது.

சிறுகதைகள் நிறைய எழுத வேண்டும். அதன் மூலம் சீர்திருத்த கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்று திராவிடஇயக்கத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன். பகுத்தறிவை உள்ளடக்கிய சிறுகதை நூல்களுக்கு திமுகஅறக்கட்டளையும் உதவி செய்யும் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+