நாட்டரசன் கோட்டை செவ்வாய் பொங்கல்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில், செவ்வாய் பொங்கல் எனப்படும் நிகழ்ச்சி இன்று (18.01.06) விமரிசையாகநடந்தது.
நகரத்தார் எனப்படும் செட்டியார் சமூகத்தினர், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை உள்ளிட்ட பகுதிகளைப்பூர்வீகமாகக் கொண்டவர்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தகம் நிமித்தமாக இவர்கள் குடியேறி வெற்றிக் கொடிநாட்டியவர்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பிறப்பின்போது இவர்களில் பலர்நாட்டரசன்கோட்டையில் குழுமி விடுவர். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று நாட்டரசன் கோட்டையில் உள்ளகண்ணுடை நாயகி அம்மன் கோவிலில் நகரத்தார் சமூகத்தினர் ஒன்று கூடி பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள்.
இந்த பொங்கல் விழாவின் முக்கிய அம்சமே, இந்த விழாவுக்கு வரும் தங்கள் சமூகத்துப் பெண்களை, தங்களது பிள்ளைகளுக்குபெண் பார்க்கும் வைபவமாக நகரத்தார் சமூகத்தினர் நடத்துவதுதான்.
பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியின்போது தங்களது பிள்ளைகளுக்கு ஏற்ற பெண்ணை பெற்றோர் பார்ப்பார்கள். பெண் பிடித்துப்போனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை அவர்கள் மேற்கொள்வார்கள். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தபாரம்பரிய விழா தவறாமல் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்ப் பொங்கலையொட்டி கண்ணுடை நாயகியம்மன் கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான நகரத்தார் சமூகத்தினர்ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடினர்.