ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி-2007
ஷார்ஜா: ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2007 நடைபெற்று வருகிறது.
ஷார்ஜா கண்காட்சி மையத்தில் கடந்த 5ம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள், அமீரக அரசுத்துறை நிறுவனங்கள், வளைகுடாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் புத்தக நிறுவனங்கள், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
தொலைக்காட்சி வந்த பின்னர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்பதைப் பொய்ப்பிக்கும் வண்ணம் ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு ஏராளமான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சில மலையாள புத்தக நிறுவனங்கள் கண்காட்சி வருவோரில் பெரும் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன.
வரும் 14ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த புத்தக கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. அதிக செலவு பிடிப்பது தான் இதற்குக் காரணமமாம்.
சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்பதற்கு தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வந்தால் பல்வேறு தமிழக புத்தக நிறுவனங்களும் அமீரகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வாய்ப்பு கிடைக்கும்.
சர்வதேச புத்தகக் கண்காட்சிகள் நடக்க இருக்கும் இடங்கள்:
2008 மார்ச் 11 முதல் 16 வரை, அபுதாபி (www.adbookfair.com)
2008 ஏப்ரல் 14 முதல் 16 வரை, லண்டன் (www.londonbookfair.co.uk)
2008 மே 2 முதல் 12 வரை, டெஹ்ரான், இரான் (www.tibf.ir)












Click it and Unblock the Notifications