தமிழர் வாழ்வு மற்றும் கலாச்சார கருத்தரங்கு
திருச்சியில் டிசம்பர் 1ம் தேதி தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இந்தியாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரம், இலக்கியம், வாழ்வியல் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக அலசப்படவுள்ளது.
செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ் ஆய்வுத் துறை மற்றும் தமிழ்திணல் மற்றும் தமிழ்ரைட்டர்ஸ் ஆகிய இரு இணைய தளங்கள் இணைந்து இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த சர்வதேச கருத்தரங்கில் ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் ேசர்ந்த 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் ேசர்ந்த தமிழறிஞர்களும் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரும், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளருமான பாதிரியார் ராஜரத்தினம் கூறுகையில், தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றஉம் பல்வேறு உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், இலக்கியம் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது.
கருத்தரங்கில் கலந்து கொள்ளும் தமிழறிஞர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி திருச்சி தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்படவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications