புதுவையில் மலேசிய எழுத்தாளர்கள்
புதுச்சேரி: இந்தியா வந்துள்ள மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் குழு புதுச்சேரி சென்றது. அங்கு இரு நாட்டு எழுத்தாளர்களும் இலக்கிய கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
மலேசியாவிலிருந்து 35 எழுத்தாளர்கள் அடங்கிய குழு இலக்கிய சுற்றுலா வந்துள்ளது. மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வந்துள்ள இந்தக் குழுவினர் இன்று புதுச்சேரி சென்றனர்.
அங்கு மலேசிய எழுத்தாளர்களுக்கு புதுச்சேரி தமிழ் சங்கத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் இரு நாட்டு எழுத்தாளர்களும் கலந்து கொண்னர்.
தென் கிழக்கு ஆசிய நாடுளில் தமிழ் வளர்ச்சி குறித்து இரு நாட்டு எழுத்தாளர்களும் ஆலோசனை நடத்தினர்.
இன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் மலேசிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளனர்.