துபாயில் தமிழ் நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: சமூக சிந்தனையாளர் சினா தானா அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற உள்ளது.
துபாயில் சமூக சிந்தனையாளர் சினா தானா (செய்யது அப்துல் காதர்) அவர்கள் எழுதிய மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் எனும் நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 8ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்நூல் சங்கமம் தொலைக்காட்சியில் சினா தானா அவர்கள் கடந்த 1 வருடம் வழங்கிய சொற்பொழிவின் தொகுப்பாகும். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் சங்கமம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கலையன்பனை 050-6507604 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications