ஈழ எழுத்தாளர் செ.யோகநாதன் மரணம்
Subscribe to Oneindia Tamil

ஈழ தமிழ் இலக்கியத்தின் முன்னோடியும், பிரபல எழுத்தாளருமான செ.யோகநாதன் திங்கள்கிழமை யாழ்ப்பாணத்தில் மரணமடைந்தார்.
சிறுகதை, நாவல், நாடகம், சினிமா என பல்துறைகளிலும் ஈடுபாடு கொண்ட இவர், பத்திரிகைகளில் கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் விமர்சனங்களையும் எழுதி வந்தார்.
ஈழத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் இவர் பல ஆண்டுகள் கலைப் பணியாற்றி, தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு, முதல்வர் கருணாநிதியாலும் பாராட்டும், பரிசும் பெற்றவர்.
ஐந்து முறை இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசையும் வென்றுள்ளார். யோகநாதன் 84 புத்தகங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications