சென்னையில் ஹால்மார்க் நகை கண்காட்சி
சென்னையில் ஹால்மார்க் நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி லிமிடெட் தென் மண்டல தலைமை பொது மேலாளர் எஸ்.குருசாமி, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் தங்க நகை கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. தி.நகரில் உள்ள ஓட்டல் அக்கார்டு மெட்ரோபாலிடனில் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தயாரான நகைகள் இடம் பெறும். செயின், நெக்லஸ், மோதிரம், வளையல், மணப்பெண் அலங்கார நகைகள் உள்பட பல நகைகள், அனைத்து மாடல்களில் கிடைக்கும். இந்த நகைகளின் தூய்மை முற்றிலுமாக பரிசோதிக்கப்பட்டு, ஹால்மார்க் முத்திரையுடன் உள்ளது.
வைரங்கள் பதித்த நகைகளும் இடம் பெறுகின்றன. இந்த வைரங்கள் சர்வதேச வைர பரிசோதனை ஆய்வகத்தில் சான்றிதழ் பெற்றவை.
மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசியின், சாஞ்சி' என்ற பெயரில் வெள்ளி பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், தங்கம் 100 கிராம் முதல் 1/2 கிலோ வரை கட்டிகளாகவும் கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications