Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உசிலம்பட்டியின் 'தீண்டாமைச் சுவரை' அகற்ற கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Brick Wall
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி அங்கு போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து அங்கு அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தபுரம். சிறிய கிராமமான இங்கு கடந்த 1989ம் ஆண்டு பயங்கர ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. தலித் சமுதாயத்தினரும் இன்னொரு சமுதாயத்தினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் 8 உயிர்கள் பறிபோயின.

இக்கலவரத்தைத் தொடர்ந்து இரு தரப்பு மக்களும் தனித் தனியாக பிரிக்கப்பட்டனர். அதற்கேற்ப ஊரைச் சுற்றிலும் செங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திக்க முடியாத அளவுக்கு சுவரால் பிரித்தனர்.

இந்த நிலையில் ஜாதிக் துவேஷத்ைத நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த சுவரை உடைக்க வேண்டும் என அங்குள்ள ஒரு தரப்பினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் மீண்டும் உத்தபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தபுரம் விரைந்து சுவரை இடிக்கலாமா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். ஊர் மக்கள் பிரதிநிதிகளோடும் அவர்கள் பேச்சு நடத்தினர்.

ஒரு நாட்டை இரு நாடாக்கி போடப்பட்ட பெர்லின் சுவரே இடிந்து சிதறிப் போய் விட்டது. ஆனால் ஒரே ஊருக்குள் சுவரை வைத்து சொந்த மக்களை பிரித்து வைத்திருக்கும் அவலம் உண்மையில் உத்தபுரத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெரும் அவமானம்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+