பஹ்ரைன் காயல் நற்பணி மன்ற ஆண்டு விழா
பஹ்ரைன் காயல் நற்பணி மன்றத்தின் (பக்வா) ஒராண்டு விழா மார்ச் 19ம் தேதி நடைபெறுகிறது.
காயல்பட்டணம் எல்லாத் துறையிலும் முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் திகழவேண்டும் என்ற உயரிய என்னத்தில் உருவாக்கப்பட்டது பக்வா ஆகும்.
கல்வி சேவையும் வேலைவாய்ப்பையும் கண்களாக கருதி குறுகிய காலத்தில் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் தொழில் கல்வி பயில மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறோம்.
இச்சீறிய பணி சிறப்புறச் செயல்பட்டதை மகிழ்ச்சியுடன் நினைவு கூற ஆண்டு விழாவின் மலர் வெளியீட்டு விழாவும், மார்ச் 19ம் தேதியன்று விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை பக்வா தலைவரும், அரேபியன் கல்ப் சிமென்ட் நிறுவனத்தின் பொது மேலாளருமான அல்ஹாஜ் ஆர்.எஸ்.எம்.அபுல் ஹசன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்கள் அறிய,
எம்.ஐ.யூசுப் சாகிப்,
காயல் உயர்கல்வி மேம்பாட்டு மையம், காயல்பட்டணம் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.