அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா
துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் வரும் ஏப்ரல் 5மே தேதி கவிஞர் அபிவை டி.எம்.எம்.தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் நடக்கும் இந்த விழாவை சே.ரெ. பட்டணம் மணி, மீரா. அப்துல் கதீம், இ. இசாக், பாரத்,
குத்தாலம் அஷ்ரப் அலி, கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்கள்
ஏற்பாடு செய்துள்ளனர்.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ்.தாஜுதீன் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
ஈமான் அமைப்பின் மார்க்கச் சொற்பொழிவு:
இன்று (திங்கட்கிழமை) துபாய் ஈமான் அமைப்பு சார்பில்
சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் மாலை நடக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும், தமிழக
அரபிக் கல்லூரிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவருமான அல்ஹாஜ் மௌலவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தஉள்ளார்.
மேற்கண்ட தகவலை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத்அலி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹமீது யாசின் 050 2533212 ஆகியோர் செய்து வருகின்றனர்.
தமிழ்ச் சங்கத்தின் நகைச்சுவை பட்டிமன்றம்:
துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏப்ரல் 3ம் தேதி மாலை 7.30 மணிக்கு
துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள ஷேக் ராஷித் அரங்கில் ராஜா பங்கு பெறும் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.
அத்துடன் பிரவஸி பாரதிய சம்மன் விருதுபெற்ற இந்திய சமூக நலச் சங்கஒருங்கிணைப்பாளர் கே. குமார் கௌரவிக்கப்பட உள்ளார். மேலும் இவ்விழாவில் தலைமை விருந்தினர்களாக ராதிகா மற்றும் சரத்குமார் பங்கேற்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நடனம் நடைபெறும் என துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் திருமதி சந்திரா ரவி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர், அகுமென், நைல் ஹெர்பல் ஹேர் ஆயில், ஈடிஏ ஸ்டார், ரிட்ஸி பால்ம் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதவிகரமாக இருந்து வருகின்றன.
இந்நிகழ்ச்சியின் ஊடக அணுசரனை விண் டிவி.