'மேஜிக்'-அந்தரத்தில் மிதந்த நடிகை ரோஜா!
சர்வதேச 'மேஜிக்' கலைஞர் ஜாதுகர் ஆனந்தின் மேஜிக் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த மேஜிக் நிகழ்ச்சியின் 50வது காட்சி நேற்று நடைபெற்றது.
இதெயொட்டி நடிகை ரோஜா, அவரது செல்வமணி, நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது ஜாதுகர் ஆனந்த், நடிகை ரோஜாவை மேடைக்கு அழைத்தார்.
மேடைக்கு வந்த ரோஜாவை, தனது கண்களை கூர்ந்து பார்க்குமாறு ஜாதுகர் ஆனந்த் கூறினார். அதன்படி ஜாதுகர் ஆனந்தின் கண்களை கூர்ந்து பார்த்த சிறிது நேரத்தில் நடிகை ரோஜா மயக்கமானார்.
இதையடுத்து அவரை உள்ள ஒரு மேஜையின் மீது படுக்க வைத்தனர். அதன்பிறகு, அந்த மேஜைக்கு அடியில் ஜாதுகர் ஆனந்த் 3 பெரிய கத்திகளை வைத்தார். பின்னர் அந்த மேஜையை எடுத்துவிட்டனர்.
ரோஜா அந்த கத்திகளில் படுத்திருந்தார். அதன்பிறகு 3 கத்திகளையும் ஆனந்த் எடுத்துவிட ரோஜா மயக்க நிலையிலேயே அந்தரத்தில் மிதந்தார்.
சிறிது நேரத்துக்குப் பின் மேஜையை ரோஜாவுக்குக் கீழ் கொண்டு வந்த வைத்தனர். இதையடுத்து ரோஜா மயக்கம் தெளிந்தார்.
அதேபோல மேடையில் சுதந்திர தேவி சிலையை மறைய வைப்பது, காற்றில் யானையை வரவழைப்பது என பல வித்தைகளையும் காட்டி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஆனந்த்.