துபாயில் 'சுடர் வம்ச' கலைநிகழ்ச்சி
துபாயில் செயல்பட்டு வரும் சுடர் வம்சம் என்ற சமுதாய விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் அமீரக கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி துபாய் இந்திய துணை தூதரகத்தில் மே 30 வெள்ளியன்று நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர் மே 9ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்கள் பெற சுடர் வம்ச நிறுவனர் ரகுராஜை 050 749 56 75 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
லக்ஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சி:
துபாயில் ரஜினி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் லக்ஷ்மண் ஸ்ருதி சேரிட்டி இசை நிகழ்ச்சி மே 9ம் தேதி மாலை ஆறு மணிக்கு வொண்டர் லேண்டில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் நிழல்கள் ரவி, மனோ, மாலதி, சுசித்ரா மற்றும் ரம்யா உள்ளிட்டோர் பங்குபெற இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நன்கொடை சுற்றுப்புறச்சூழல் மற்றும் பாதுகாப்புடன் கூடிய பள்ளிகளை ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரம் பெற 050 582 4376 / 050 465 5830 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications