கருணாநிதிக்கு பெரியார் சமூக நீதி விருது
Subscribe to Oneindia Tamil

இது குறித்து திருச்சியில் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கதக்கது.
ஆனால் இதற்கு சாக்கு போக்கு சொல்லி உயர் கல்வி நிறுவனங்கள் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்தப்பட மறுக்கின்றன.
உலக மயம், தாராளமயம் போன்றவற்றாலும், ஆன் லைன் வர்த்தகத்தாலும் தான் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்யக் கோரியும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாடு முழுவதும் பிரசாரம் நடத்தப்படும்.
பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு சென்னையில் செப்டம்பர் மாதம் நடைபெறும். இதில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்கு பெரியார் சமூக நீதி விருது வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications