பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் சித்திரை திருவிழா
Subscribe to Oneindia Tamil
பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
சமீபத்தில் நடந்த இந்த விழாவிற்க்கு கலைக்கூடத்தின் தலைவர் அண்ணமலை பாஸ்கர் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தமிழருவி மணியன் எழுதிய 'கனவுமெய்பட வேண்டும்' என்ற திறனாய்வு நூலை பாரிஸ் புரநக மண்டல ஆலோசகர் எர்வே போமனுவர் வெளியிட்டார்.
நூலின் முதல் பிரதியை கோவை அரிமா ஆலோசகர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் தமிழருவி மணியன் பாரதி கண்ட கனவுகள் என்ற தலைப்பில் விரிவாக உரை நிகழ்த்தினார்.
இதில் கவிமலர், கருத்தரங்கம், நடனநிகழ்ச்சி, ராகா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவையும் நடந்தேறின.
கலைக்கூடத்தின் உறுப்பினர்கள் தெ.மணிவண்ணன், கணேச ஆதினார்,
பாபு, தவமணி அண்ணாமலை, தெ.திருமுருகன், து.ராஜி, மீனா மணிவண்ணன், அனுபமா திருமுருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருகிணைந்து நடத்தினர்.













Click it and Unblock the Notifications