நான்கு நிமிடத்தில் ஆளை வரையும் ஓவியர் !
கொடைக்கானலில் ஒருவரை பார்த்த 4 நிமிடத்தில் அவரைப் போன்றே வரைந்து சாதனை படைத்து வருகிறார் பாலு என்ற ஓவியர்.
கோவை மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்த பாலுவுக்கு சிறு வயது முதலே ஓவியம் தீட்டுவதில் அளவு கடந்த ஆர்வம்.
ஒருவரை பார்த்த நான்கு நிமிடத்தில் அதே போன்று ஓவியம் வரைந்து விடுகிறார். இந்த சாதனை ஓவியர் இப்போது கொடைக்கானலில் முகாமிட்டு ஓவியங்களை வரைந்து தள்ளுகின்றார்.
குறிப்பாக தன்னை காண வரு்ம் சுற்றுலா பயணிகளின் முகத்தை அப்படியே வரைந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்து விடுகிறார்.
இதனால் இவரை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
பாலு கூறுகையில் நான் சிறு வயது முதலே ஓவியம் வரைந்து வருகிறேன். எனக்கு என குரு யாரும் இல்லை. எனது சொந்த முயற்சியின் காரணமாகவே ஓவியங்களை வரைந்து வருகிறேன். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே எனது லட்சியம் என்கிறார்.












Click it and Unblock the Notifications