துபாய் சுடர்வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil

அமீரகத்தில் சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் அஜ்மான் டாக்டர் மூர்த்தி, எஃப்.எம். அன்வர் பாஷா, குத்தாலம் ஏ. அஷ்ரஃப் அலி, கவிஞர் செ.ரெ.பட்டணம் மணி உள்ளிட்டோருக்கு 'சமுதாயச் சுடர்' விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கவிஞர் அப்துல் கத்தீம் அவர்களுக்கு 'இலக்கியச்சுடர்' விருதும், துபாய் ஈமான் அமைப்பின் செயலாளர் ஏ. முஹம்மது தாஹாவிற்கு 'சேவைச் சுடர்' விருதும், நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்திற்கு 'செய்திச்சுடர்' விருதும் வழங்கப்பட்டது.
சுடர்வம்சம் அமைப்பின் நிறுவன தலைவர் ரகுராஜ் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். குழந்தைகளின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நிகழ்ச்சிக்கு மெருகூட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
அமீரகத்தின் பல்வேறு அமைப்புகளின நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சுடர்வம்சம் அமைப்பினரை தொடர்பு கொள்ள: 050 2164375
இ-மெயில்- [email protected]












Click it and Unblock the Notifications