திருக்குறளை பிழையின்றி ஒப்புவிக்கும் 3-ம் வகுப்பு மாணவன்

காஞ்சி பிள்ளையார்பாளையம் பாரதி நகர் கிருஷ்ணன் தெருவில் வசிப்பவர் கண்ணன். இவர் பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பார்வதி காஞ்சீபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறார்.
இவர்களது மகன் கிருஷ்ணகுமார் எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிகுலேசன் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த இளம் வயதினிலேயே அவன் சாதனை மாணவனாக திகழ்கிறான். 1330 குறள்கள், 108 ஆத்திச்சூடி, 99 கொன்றைவேந்தன், 30 திருவெம்பாவை உள்ளிட்டவற்றை எந்த பிழையும் இன்றி ஒப்பித்து வருகிறான்.
எம்.எல்.ஏ. பாராட்டு:
தாய்-தந்தையின் ஊக்குவிப்பு காரணமாக மாணவன் கிருஷ்ணகுமார் இந்த சாதனையைப் படைத்து வருகிறான். மாணவன் கிருஷ்ணகுமாரைப் பாராட்டி காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், எஸ்.எஸ்.கே.வி. பள்ளி தாளாளர் சி.கே.ராமன் உள்ளிட்ட பலர் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர்.












Click it and Unblock the Notifications