கரூர் தேசிகாச்சாரி பாலத்துக்கு 85 வயது!

அமராவதி நதியின் தாலாட்டில் திளைத்திருக்கும் நகரம் கரூர். ஒரு காலத்தில், இரு கரைகளையும் தொட்டபடி ஓடுவாளாம் அமராவதி. ஆனால் இப்போது அது ஒரு கனாக் காலம் ஆகி விட்டது.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் போது வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். இதனால் ஆற்றில் இறங்கி தான் கரூரை அடைய முடியும் என்ற சூழல் இருந்ததாம்.
இதனால் அமராவதி ஆற்றில் பாலம் கட்ட முடிவு செய்து பணிகள் தொடங்கின. கட்டுமானப் பணி 5 ஆண்டுகள் வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இப்படியாக நீண்ட காலமாக கட்டுமானத்தில் இருந்து வந்த இப்பாலம், 1924 ம் ஆண்டு ஜூன் 20 ம் தேதியன்று திறக்கப்பட்டது.
சென்னை கவர்னர் விஸ்கவுன்ட் கோஸஜன் ஹாவுஸ்ட் இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு தேசிகாச்சாரி பாலம் என்று பெயரிடப்பட்டது.
நேற்றுடன் 84 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 85 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது தேசிகாச்சாரி பாலம்.
84 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் இந்த பாலம் இன்று வரை வலுவான நிலையில் உள்ளது. கரூர் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
ஆமராவதி ஆற்றில் பல முறை வெள்ள பெருக்கு ஏற்பட்ட போதிலும் பாலம் சேதம் அடையாமல் உறுதியுடன் விளங்கி வருகிறது.
சும்மாவா சொன்னார்கள் 'ஓல்டு இஸ் கோல்டு' என்று!












Click it and Unblock the Notifications