Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்டன் கப்பலில் பணியாற்றிய தியாகி செண்பகராமனின் சிலை திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய, சென்னை மீது குண்டு வீசிய ஹிட்லரின் எம்டன் கப்பலில் பணியாற்றிய தியாகி செண்பகராமனின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார்.

இந்தியாவில் இருந்து ஜெர்மனி சென்று அங்கு இருந்து கொண்டே இந்தியாவின் சுதந்திரத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து தியாகங்களை புரிந்தவர் டாக்டர் செண்பகராமன்.

ஜெய்ஹிந்த் என்ற கோஷத்தை முதலில் எழுப்பிய இவர், சுபாஷ் சந்திரபோசையும் ஜெய்ஹிந்த் என்ற கோஷத்தை முழங்கச் செய்தவர். ஜெர்மனி மன்னர் கெய்சரின் ஆலோசகராக சில காலம் பணிபுரிந்த இவர், ஹிட்லரின் ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்து எம்டன் கப்பல் படையில் பணியாற்றினார்.

அப்போது, 1914ம் ஆண்டில் நடந்த முதல் உலகப் போரின்போது இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை விரட்டும் நோக்கத்தில் எம்டன் கப்பலின் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் குண்டுவீச காரணமாக இருந்தவர்.

இதுபோல இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட, தமிழகத்தை சேர்ந்த 1,235 தியாகிகளின் புகைப்படங்கள், காந்தி மண்டப வளாகத்தினுள் அமைந்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தினுள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த மணி மண்டபத்தை முதல்வர் கருணாநிதி 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி திறந்து வைத்தார். இந்த மணிமண்டபத்தின் முன்பாக, ஏற்கனவே தியாகி ஆர்யா என்னும் பாஷ்யம் மற்றும் தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரது சிலைகளை 17.7.1999-ல் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது, இந்த சிலைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள தியாகி செண்பகராமனது சிலையையும், முதல்-அமைச்சரே திறந்து வைக்க உள்ளார்.

காந்தி மண்டப வளாகத்தினுள் தியாகிகள் மணி மண்டபத்தை தவிர ராஜாஜி நினைவகம், ராஜாஜி அருங்காட்சியகம், காந்தி அருங்காட்சியகம், காந்தி மண்டபம், திறந்தவெளி, கலையரங்கம், மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபம், பக்தவச்சலம் நினைவகம், ரெட்டை மலை சீனிவாசன் மணி மண்டபம் (கட்டப்பட்டு வருகிறது), காமராஜர் நினைவகம் ஆகியவை அமைந்துள்ளன.

தியாகிகள் தினமான இன்று சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணி மண்டபத்துக்கு எதிரில் நிறுவப்பட்டுள்ள தியாகி செண்பகராமன் சிலையை, முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று காலை 10 மணியளவில் திறந்து வைத்தார்.

இந்த சிலையின் உயரம் 8 அடி ஆகும். சிலை திறப்புக்குப் பிறகு, தியாகிகள் செண்பகராமன், சங்கரலிங்கனார், ஆர்யா என்னும் பாஷ்யம் ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி முதல்-அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+