எனக்கு பொறாமை தெரியாது!-வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

நான் புதியவர்களைப் பார்த்து பொறாமைப்படுவாதாகக் கூறுகிறார்கள் சிலர். என்னிடம் பலருக்கும் தெரியாத ஒரு குணம் உள்ளது. அதுதான் பொறாமையற்ற குணம், என்றார் வைரமுத்து தன் பிறந்த தின விழாவில்.

தனது 56 வது பிறந்த தின விழாவைக் கவிஞர்கள் தினமாக்க் கொண்டாடிய கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு ரூ.20 பணமுடிப்பு மற்றும் சிறப்பு விருதினை அளித்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

வைரமுத்து எழுதிய பாற்கடல் என்ற நூல் இந்த விழாவில் திறனாய்வு செய்யப்பட்டது. பின்னர் பேசிய வைரமுத்து, இந்த துறை கடல் மாதிரி. தினமும் பலர் இங்கே சங்கமித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் யாரையும் பார்த்து நான் பொறாமை கொண்டதில்லை. முடிந்தவரை ஆற்றுப்படுத்தவே முயல்கிறேன்.

என்னிடம் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு குணம் உண்டு. நான் யாரைப் பார்த்தும் பொறாமைப் படுவதில்லை. பொறாமை என்பது களை. நான் பயிராகவே இருக்க ஆசைப்படுகிறேன். களையாக இருக்க எப்போதும் விருப்பமில்லை. உண்மையில் பொறாமை என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது.

எவனுக்கு தன்னம்பிக்கை அதிகமோ அவன் பொறாமைப்பட மாட்டான். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் என் மிச்ச வாழ்க்கைக்கு நான் எழுதி வைத்துள்ள சாசனம், என்றார் வைரமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+