ஜப்பானிய சங்கம் நடத்தும் தமிழ் பேச்சுப் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏபிகே-ஏஓடிஎஸ் தொசாகாய் என்ற ஜப்பானிய சங்கத்தின் தமிழ்நாடு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.ரங்கநாதன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்ப் பேச்சுப் போட்டி ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ளது. மற்ற உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்ப் பேச்சுப் போட்டி ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும்.
கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கிலப் பேச்சுப் போட்டி செப்டம்பர் 9 ம் தேதி நடைபெறும் என்றார்.
போட்டிகள் குறித்து முழு விவரங்களுக்கு:
044 - 2374 3575, 2374 0318, 3290 3332 எண்களில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications