31ல் பெங்களூர் தமிழ்ச் சங்க வாசகர் வட்ட கூட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வாசகர் வட்ட நிகழ்ச்சி வரும் 31ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் மு. புண்ணிய மூர்த்தி, ஐ.ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் மாதந்தோறும் வாசகர் வட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 62வது வாசகர் வட்ட நிகழ்ச்சி வரும் 31ம் தேதி மாலை 4.15 மணிக்கு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது.
'விடுதலைப் போரில் தமிழர்கள்' என்ற பொருளில் விவாதம் நடக்கிறது. மு.புண்ணியமூர்த்தி அறிமுக உரைற்றுகிறார். சங்கத் தலைவர் ப.சண்முகசுந்தரம் தலைமை தாங்குகிறார். முருகு சுப்பிரமணியம் சிறப்புரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications