நாளை பெங்களூரில் தமிழ் இலக்கிய பேரவைக் கூட்டம்
பெங்களூர்: தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் தா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் கிளை அமைப்பான தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் மாதம் தோறும் இலக்கியக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதக் கூட்டம் நாளை (30ம் தேதி) நடைபெறவுள்ளது. பெங்களூர் சிவாஜி நகர் தர்மராஜா கோயில் தெருவில் உள்ள மெத்தாடிஸ்ட் மிஷன் பள்ளியில் அன்று மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.
இக் கூட்டத்தில் நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கம் பிள்ளை காலத்திய "குற்றமும் தண்டனையும்' என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் இரா. சீனிவாசன் சொற்பொழிவாற்றுகிறார்.
பேராசிரியர் தா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அனுராதா ரமேஷ் வரவேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.