பாரதியார் பல்கலை குறும்பட போட்டி!
கோவை: பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் பெண் அடிமை போக்குவோம் என்ற பெயரில் குறும்பட போட்டி நடத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், செப்டம்பர் 22ம் தேதி, மகளிர் கல்வித் துறை சார்பில் "பெண் அடிமை போக்குவோம்' என்ற கருத்தரங்கு நடைபெறும். இதில் தி.க தலைவர் கி.வீரமணியும், குன்றக்குடி அடிகளாரும் பங்கேற்கின்றனர்.
இக் கருத்தரங்கை முன்னிட்டு, பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் குறும் படப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
செப்டம்பர் 15ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களது குறும்படப் படைப்புகளை பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பியல் துறைத் தலைவர் தாமஸிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் 23ம் தேதி, பல்கலைக்கழக வளாகத்தில் கணினி தொடர்பான கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில் கணினித் துறை தொடர்பான மாணவர்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தலாம் என்றார்.