ஈரோட்டில் தமிழ் வலம் அமைப்பின் இலக்கிய விழா
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு தமிழ்வலம் அமைப்பு சார்பில் சம்பத்நகர் கொங்கு கலையரங்கில் இலக்கிய விழா நடைபெற்றது.
புலவர் குழந்தை திருவுருவப் படம் திறப்பு, தமிழ்வலம் வெண்பா நானூறு நூல் வெளியீட்டு விழா, வெண்பாப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு, பட்டம், விருது வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், கல்வெட்டறிஞர் புலவர் செ.ராசு, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் மற்றும் தமிழறிஞர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தமிழ்வலம் அமைப்பு தலைவர் வி.வி.ராமசாமி, செயலர் ரெ.மகேந்திரன், பொருளாளர் அ.அ.துரை செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications