சாதனையாளர்களுக்கு விருது
செங்கல்பட்டு: பாரதி ப்ரியா புத்தக நிலையம், இலக்கிய வீதி இணைந்து சாதனையாளர்களுக்கான விருதுகளை வழங்கியது.
செங்கல்பட்டு பாரதி ப்ரியா புத்தக நிலையம், இலக்கிய வீதி இணைந்து நடத்திய நூல் அறிமுக விழா மற்றும் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை கம்பன் கழகச் செயலர் இலக்கிய வீதி இனியவன் வரவேற்றார். செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி இரத்தினவேல் கணேசன் தலைமை வகித்தார்.
சென்னை கேலக்ஸி கம்யூனிகேஷன் நிர்வாக இயக்குனர் ரரேஷ் பிரபா, 2007-08ஆண்டுக்கான பாரதி ப்ரியா நினைவு விருதுகளை வழங்கினார்.
இலக்கிய வீதி சார்பில் கவிஞர் தாரா பாரதியின் 'கவி ஞாயிறு தாராபாரதி கவிதைகள்' என்ற நூலை திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அறிமுகம் செய்தார்.
தன்னம்பிக்கைக்கான விருது சித்தூர் மாவட்டம் பலமெனர் கிராமத்தைச் சேர்ந்த டி.சுஜாதாவுக்கு வழங்கப்பட்டது. பட்டதாரியான சுஜாதா, இரு கைகளையும் இழந்திருந்தாலும் கால்களாலேயே எழுதுவது வரைவது கோலம்போடுவது மலர் அலங்காரம், கணிப்பொறியை இயக்குவது போன்ற பணிகளை செய்கிறார்.
நேர்மைக்கான வருது சென்னை ஆட்டோ டிரைவர் கே.இராமனுக்கு வழங்கப்பட்டது. இவர் கடந்த ஜூன் மாதம் தன் ஆட்டோவில் தவறவிட்ட 80 பவுன் நகைகள் மற்றும் காமிராவை சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒப்படைத்து பாராட்டைப் பெற்றார்.
குறள்கள் ஒப்பித்தவர்களுக்கு இதுவரை 30 ஆயிரம் குறள் புத்தகங்களை வழங்கியதற்காக காட்டாங்கொளத்தூர் கருநிலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிஞர் ஆ.ரூபி ரெசினா பாராட்டப்பட்டார்.
பொன்விளைந்த களத்தூரைச் சேர்ந்த ப.ராஜேஷ்குமார் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் சிறப்பிடம் பெற்றதற்காக கௌரவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications