அபிராமி மெகா மாலில் பனி கொலு!
இவற்றைத் தவிர ஷாப்பிங் செய்ய வசதியாக ஏராளமான கடைகளும் உள்ளன.
இப்போது நவராத்திரி சீஸன்.
இதை வித்தியாசமாகக் கொண்டாடும் வகையில் பனி கொலு ஒன்றை அபிராமி மெகாமால் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பனி கொலுவில் கணபதி, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, சிவபெருமான்-பார்வதி போன்ற கடவுள்களின் சிலைகள் வைக்கபட்டுள்ளன.
முழுக்க முழுக்க பனிக் கட்டியிலேயே செய்யப்பட்ட இந்தச் சிலைகளை ஸ்னோ வேர்ல்டில் வைக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் கொலுவில் நிறுத்தி வைத்துள்ளனர். பனி கொலுவுக்கு வரும் பெரியவர்கள் இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வாங்கியிருந்தால் ஒரு சிறிய டவலும், குழந்தைகளுக்கு இனிப்பும் வழங்கப்படும்.
மேலும், இன்று செவ்வாய்க் கிழமை அபிராமி மாலின் மையப் பகுதியில் உள்ள எகிப்து தேவதை சிலை மேடையில் உற்சவத்துடன் நவராத்திரி சிறப்புக் கொலு துவங்குகிறது. இந்தக் கொலு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் இந்தக் கொலுவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜை நேரத்தில் கொலுவுக்கு வரும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை அபிராமி மெகா மால் அதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன், இயக்குநர் நல்லம்மை ராமநாதன் ஆகியோர் செய்துள்ளனர்.













Click it and Unblock the Notifications